யார் தமிழர்கள்???- மரபியல்ரீதியாக ஒரு ஆய்வுபார்வை
இன்று நாம், தமிழர்கள் என்று அடையாளப்படுத்தும் ஒரு இனக்குழு உண்மையில் நான்கு இனக்குழுக்களின் சேர்க்கை. இந்த நான்கு இனக்குழுக்கள், வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இடங்களில் இருந்து, இந்தியாவிற்கும்,பிறகு தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்தவர்கள். இதில் முதல்முதலில் தென்இந்தியாவிற்கு வந்தவர்கள் ஆப்ரிக்க வேட்டுவர்கள் (African hunter கைதேர்ஸ்/AHG). இவர்கள் ஆப்ரிக்காவில், எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவிக்கும்,பிறகு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது. இவர்களிடம் ancient ancestral south indian(AASI) என்ற மரபியல் கூறு இருந்திருக்கின்றது. இவர்கள் தான் ஆதிதிராவிடர்கள்.இவர்கள் ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறின மிகவும் தொன்மையான இனக்குழு. இவர்கள் எகிப்த்திய நாகரிகம் உருவாவதற்கு முன்பே ஆப்ரிக்காவில் இருந்து பிரிந்து,கிழக்குத்திசையாக, ஆஸ்திரேலியா வரை சென்றிருக்கிறார்கள். இவர்கள் எந்த வழியாக தென்னிந்தியாவிற்குள் வந்திருக்கக்கூடும் என்று தெரியவில்லை. தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த இவர்கள், பிறகு வடஇந்தியவரை பரவிருக்கிறார்கள். காட்டுவாசிகளாகிய இவர்கள்,பெருவாரியாக மிருகங்களை வேட்டையாடி உண்டு, குகைகளில் வாழ்க்கைநடத்தியிருக்க கூடும் என்று நம்பப்படுகின்றது. இவர்கள் ஆப்ரிக்கர்களை போல முன்னோர்வழிப்படை பின்பற்றியிருந்திருக்கக்கூடும் (ancestral worship). இன்று தமிழ் நாட்டில் காணப்படும் கள்ளர் மற்றும் இருளர் சமூகக்கத்தினர் இவர்களின் நேரடி வழித்தோன்றல்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இவர்களுக்கு சற்றே முன்னோ அல்லது பின்னோ, sino-tibetian என்ற இனக்குழு இந்தோனேஷியா காடுகளில் இருந்து வடகிழக்கு இந்தியாவிற்கும், பின்பு தென்இந்தியாவிற்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் தான் நாகர்கள். இவர்களும் காடு,மலை சார்ந்த பகுதிகளில் வசித்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இவர்கள் இந்தோனேசியாவில் இருந்து குடியேறியதால் இவர்களிடம் neanderthal DNA என்னும் மிகவும் தொன்மையான மரபியல் கூறு காணப்படுகின்றது. இவர்கள் நாகர்மொழி என்னும் தொன்மையான மொழியை பேசி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இவர்கள் வடகிழக்கு இந்தியாவில் இருந்து வங்கம்,ஒரிசா,ஆந்திர வழியாக தமிழ் நாட்டிற்குள் வந்து, பிறகு கேரளம்,தென்கர்நாடகம் வரை பரவியிருக்க கூடும். இவர்கள் பெருவாரியாக நாட்டார்தெய்வ வழிபாடு செய்பவர்களாக இருந்திருக்க கூடும். இன்று தமிழ்நாட்டில் காணப்படும் மறவர் மற்றும் சாணார் சமூகக்கத்தினர் இவர்களின் நேரடி வழித்தோன்றல்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.நாகர்களும் ஆதிதிராவிடர்களும் சேர்ந்து உருவான இனக்குழு தான் அன்று இந்திய முழுவதும் பரவி இருந்திருக்கிறார்கள். இந்த இனக்குழுவை இன்று நாம் நாகர் கலப்பினம் (mixed nagas) என்று அழைக்கிறோம். இன்று தமிழ் நாட்டில் காணப்படும் பள்ளர்,பள்ளி,பறையர் சமூகக்கத்தினர் இவர்களின் நேரடி வாரிசாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
மூன்றாவதாக,சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் சுமேரிய நாகரிகத்தில் இருந்து பிரிந்த ஒரு இனக்குழுவினர் ஈராக்,ஈரான்,ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் வழியாக சிந்து சமவெளி பகுதியில் குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் தான் திராவிடர்கள். இவர்களை தான் இன்று நாம் மரபியல் ரீதியாக அறியப்படும் தொன்மையான சுமேரிய வேளாண்குடியினர் (ancient iranian neolitic farmers) என்று அழைக்கிறோம். இவர்களிடம் Bactria-Margiana Archaeological Complex (BMAC) என்ற மரபியல் கூறு அதிகமாக இருந்திருக்கின்றது. இன்று தமிழ் நாட்டில் காணப்படும் வேளாளர்,நகரத்தார்,கோனார் சமூகக்கத்தினர் இவர்களின் நேரடி வழித்தோன்றல்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இவர்கள் இங்கு பூர்வகுடியாக வாழ்ந்த நாகர் கலப்பினத்தவரோடு கலந்து சிந்துசமவெளி நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தென்னிந்தியர்களிடம் அதிகமாக Ancient South Indian (ASI) மரபியல் கூறு காணப்படுகின்றது. இந்த ASI மரபியல் கூறு AASI மற்றும் BMAC ஆகிய மூல மரபியல் கூறுகளின் சேர்க்கை. ஆக, இன்று தென்னிந்தியர் என்று நாம் அழைக்கும் இனக்குழு மூன்று இனக்குழுக்களின் (திராவிடர், ஆதிதிராவிட மற்றும் நாகர்) சேர்க்கையால் உருவாகியிருக்கிறார்கள். ஆதிதிராவிடர் மற்றும் நகர்களை போல் அல்லாமல், திராவிடர்கள் மொழி மற்றும் நெல் நாகரிகத்தில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் கொடுந்தமிழ் (proto-dravidian) மொழியை பேசியதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இவர்கள் சைவசமயத்தையும்,லிங்க வழிபாட்டையும், முருக வழிபாட்டையும் பின்பற்றியிருக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இவர்கள் ஆகமமதத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்ததாக நம்பப்படுகின்றது.சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு பிறகு தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த இவர்கள் சைவசமயத்தையும்,தமிழ் மொழியையும்,நெல்நாகரிகத்தையும் தமிழ்நாட்டிற்கு கடத்திவந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

No comments:
Post a Comment